
உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஊழல் முறைகேடுகளில் சிக்குவது இந்தியாவில் அவ்வப்போது நிகழும் விஷயம். இந்த முறை அப்படி சிக்கியிருப்பவர் சித்ரா ராமகிருஷ்ணா.
தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (சிஇஓ), மேலாண் இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா. இவருக்கு நிகராக இந்த விவகாரத்தில் பேசப்படுபவர்கள் அவ்வளவாக அறியப்படாத நபரான ஆனந்த் சுப்ரமணியனும், இதுவரை யார் கண்ணிலும் பட்டிராத மர்ம சாமியார் சிரோமணியும். ஆனந்த் சுப்ரமணியன், என்எஸ்இ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இமயமலையில் வசிப்பதாக சித்ரா குறிப்பிட்ட முகம் தெரியா சாமியார் சிரோமணி, சித்ராவை மின்னஞ்சல் வழியே வழிநடத்தியவர். த்ரில் வெப் சீரிஸுக்கு நிகரான மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக அமைந்திருக்கிறது இந்த விவகாரம்!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.