மக்னா யானையை பிடிக்க களமிறங்கியது சின்னத்தம்பி கும்கி யானை!

சின்னத்தம்பி கும்கி யானை
சின்னத்தம்பி கும்கி யானை மக்னா யானையை பிடிக்க களமிறங்கியது சின்னத்தம்பி கும்கி யானை!

மக்னா யானையை பிடிக்க சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்ததால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிலிருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கோவை மாநகர் பகுதிக்குள் சுற்றி வருகிறது. தற்போது பேரூர் பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் தனியார் கல்லூரி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் மக்னா யானை சுற்றிவரும் நிலையில் அதனை பிடிப்பதற்கு டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி யானையை கொண்டு மக்னா யானையை பிடிக்கும் பணியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தவும் வனத்துறையினரின் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in