போதையில் பைக் ஓட்டிச் சென்ற தந்தை: தாய் கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்த குழந்தை

போதையில் பைக் ஓட்டிச் சென்ற தந்தை: தாய் கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்த குழந்தை

மித மிஞ்சிய குடிபோதையில் பைக் ஓட்டிச் செற தந்தை சரிவர பிடிக்காததால் டூவீலரில் இருந்து தவறி விழுந்து ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், எஸ்.குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர் காந்திவேல்(25). இவர் தீபாவளி அன்று விடுமுறை என்பதால் தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை கபிலன் ஆகியோருடன் எஸ்.எஸ்.எம் கல்லூரி அருகில் உள்ள தன் உறவினரின் இல்லத்திற்குச் சென்றிருந்தார். அவர் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மறுநாள் தன் மனைவி மற்றும் ஒரு வயது மகன் கபிலனுடன் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது காந்திவேல் மதுபோதையில் இருந்தார். அதனால் பைக்கில் முன்னால் இருந்த அவரது மகன் கபிலனை சரியாகப் பிடிக்கவில்லை. இதனால் வளைவு ஒன்றில் திரும்பிய போது அதில் இருந்து குழந்தை கபிலன் தவறி விழுந்தான். அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை கபிலன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இன்று உயிர் இழந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in