9 கிலோ தங்க நகைகள், வைரம் கொள்ளை; கடையை திறந்த ஓனர் 'ஷாக்': சிசிடிவி ஹாட் டிஸ்க்குடன் திருடர்கள் ஓட்டம்

சென்னை பெரம்பூரில் கொள்ளை நடந்த நகைக்கடை
சென்னை பெரம்பூரில் கொள்ளை நடந்த நகைக்கடை 9 கிலோ தங்க நகைகள், வைரம் கொள்ளை; கடையை திறந்த ஓனர் 'ஷாக்': சிசிடிவி ஹாட் டிஸ்க்குடன் திருடர்கள் ஓட்டம்

சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை வெட்டிங் மிஷினால் வெட்டி கடையில் இருந்த 9 கிலோ தங்க நகை, 20 லட்சம் மதிப்புள்ள வைரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளை
பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளை

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் ஜே.எல்.கோல்ட் பேலஸ் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர் கடையை பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளை
பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளை

உள்ளே சென்ற ஸ்ரீதர், கடைக்குள் இருந்த லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் வெல்டிங் மிஷினால் உடைத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திருவிக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வெல்டிங் மிஷினால் நகைக்கடை உடைப்பு
வெல்டிங் மிஷினால் நகைக்கடை உடைப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in