`நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்'; புகைப்படத்தை அனுப்பிய காதலன்; உயிரை மாய்த்த பட்டதாரி காதலி!

`நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்'; புகைப்படத்தை அனுப்பிய காதலன்; உயிரை மாய்த்த பட்டதாரி காதலி!

காதலன் வேறொரு பெண்ணுடன் சென்றதால் மனம் உடைந்த காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மாதவரம் மாத்துரை சேர்ந்தவர் ஏஞ்சல். பி.காம் பட்டதாரியான இவர் கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான தனுஷ் என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் இரண்டு பேரின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது காதலன் தனுஷுக்கு பைக் உள்பட பல்வேறு பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து உள்ளார் காதலி ஏஞ்சல்.

இதனிடையே காதலன், காதலி இருவருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்குள்ளும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஏஞ்சலின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார் காதலன் தனுஷ். அந்தப் படத்திற்கு கீழே, "நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் ஆவேசம் அடைந்த காதலி ஏஞ்சல், தனது காதலன் தனுஷை வீடியோ காலில் தொடர்பு கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மெசேஜ் அனுப்பியும் இருக்கிறார் ஏஞ்சல். காதலன் கைவிட்டதை நினைத்து மனமுடைந்த ஏஞ்சல் நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஏஞ்சல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காதலன் தனுஷிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலைக்கு முன் ஏஞ்சல் பேசிய வீடியோ குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்தது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் ஏஞ்சல், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் காதலனை யாரும் தாக்க வேண்டாம் என்றும் நல்லா இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து காதலன் தனுஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in