தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போனில் அரட்டை: எஸ்.ஐ அதிரடியாக சஸ்பெண்ட்

எஸ்.ஐ சிவப்பிரகாசம்
எஸ்.ஐ சிவப்பிரகாசம்தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போனில் அரட்டை: எஸ்.ஐ அதிரடியாக சஸ்பெண்ட்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டதை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28-ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகே இருக்கையில் அமர்ந்தவாறு நாமக்கல் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். தேசிய கீதத்திற்கு அருகில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் சிவப்பிரகாசம் செல்போனில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in