தமிழகத்தில் விரைவில் மின் கணக்கீடு செய்வதில் மாற்றம்: 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க முடிவு

மின்வாரியம்
மின்வாரியம்தமிழகத்தில் விரைவில் மின் கணக்கீடு செய்வதில் மாற்றம்: 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க முடிவு

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.10 ஆயிரத்து 790 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையில் பொதுமக்கள் இருமாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.

இதற்குப் பதில் மின் கணக்கீட்டை துல்லியமாக கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.

தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் இப்பகுதியில் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ( ஜூன் 5) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மூன்று கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தியாகராயர் நகரில் 1.10 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-3-ம் கட்ட ஸ்மார்ட் மீட்டர் பொருந்தும் திட்டத்துக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், மூன்றாவது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும்.

இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட்களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in