நாளை முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

மழை
மழைநாளை முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை 27ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in