"டிசம்பர் 7-ம் தேதி வட கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைய கூடும் என்றும் பிறகு மேற்கு வங்கக்கடல் திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி ஒட்டி வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலும் கூடிய லேசானது முதல் முதலான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் வரும் 7-ம் தேதி வட கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும் என்றும் டிசம்பர் 7-தேதி வட கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.