இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 14 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்ங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in