பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு: சென்னை போலீஸ் அதிரடி!

போராட்டத்தில் காங்கிரஸ்
போராட்டத்தில் காங்கிரஸ்மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு; சென்னை போலீஸ் அதிரடி!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுமதியின்றி கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வ பெருந்தகை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதி இழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கறுப்பு உடை அணிந்தும் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.  மேலும் அவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், நகரக் காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்களை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். சட்டவிரோதமாகக் கூடுதல், நகரக் காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் மே17 இயக்கத்தினர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in