வாடிக்கையாளர் சேமிப்பு பணத்தில் கைவைப்பு :அஞ்சலக பெண் ஊழியர் உள்பட இருவர் சிக்கினர்

வாடிக்கையாளர் சேமிப்பு பணத்தில் கைவைப்பு :அஞ்சலக பெண் ஊழியர் உள்பட இருவர் சிக்கினர்

ராமநாதபுரம் அருகே அஞ்சலக வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குத்தொகையில் கைவைத்த  பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது தபால் ஆய்வாளர் போலீஸில் புகார் அளித்தார். 

 ராமநாதபுரம் அருகே துரத்தியேந்தல் அருண்குமார் (27). சித்தார்கோட்டை அருகே ஜமீன்தார்வலசையைச் சேர்ந்த ஜெயந்தி (32). இவர்கள் இருவரும் சம்பை கிளை அஞ்சலத்தில் பணியாற்றினர்.

இக்கிளையில் கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கணக்கு தணிக்கை நடந்தது. இதில் 2017 ஏப்.25-ம் தேதி முதல் 2018 ஏப்.13-ம் தேதி வரை அஞ்சலக  சிறுசேமிப்பு, நிரந்தர சேமிப்பு கணக்குகளில்  வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை வரவு வைக்காமல் இருந்தது தெரிந்தது. இத்தொகையில்  ஜெயந்தி ரூ.24 ஆயிரத்து 700 , அருண் குமார் ரூ.49 ஆயிரத்து 500 என ரூ.74 ஆயிரத்து 200 கையாடல் செய்துள்ளதாக திருவாடானை அஞ்சல்  கோட்ட ஆய்வாளர் சுதன் போலீசில் புகாரளித்தார். இதன்படி, தேவிபட்டினம் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in