தோல்வியிலிருந்து மீட்டெடுத்த கலங்கரை விளக்கம்; ஆசிரியருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

தோல்வியிலிருந்து மீட்டெடுத்த கலங்கரை விளக்கம்; ஆசிரியருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவர்கள்!
தோல்வியிலிருந்து மீட்டெடுத்த கலங்கரை விளக்கம்; ஆசிரியருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை நினைவு பரிசாக வழங்கிய சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே பஞ்சந்திக்குளம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் தமிழொளி. தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய இவர், கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தேர்வில் தோல்வி அடைந்த மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தனி பயிற்சி மையம் தொடங்கினார். இதில் படித்தவர்கள் பலர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். 

இந்த நிலையில், தோல்வியில் துவண்டிருந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற தமிழொளிக்கு, பாராட்டு விழா நடத்த வேண்டும் என அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மாணவர்கள் சேர்ந்து தமிழொளிக்கு பஞ்சநதிக்குளம் ராமசாமி பெருமாள் கோயிலில் பாராட்டு விழா நடத்தினர்.

இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் தமிழொளிக்கு நினைவு பரிசாக  10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கினர். நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விழாவில் கலந்து கொண்டு ஆசிரியருக்கு கார் பரிசை வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர் சிறப்பு மலரை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மதியழகன் வெளியிட்டார். இதை ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் நடராஜன் பெற்றுக்கொண்டார். 

தோல்வி பாதைக்குச் சென்ற மாணவர்களை வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு நினைவு பரிசாக கார் வழங்கியது, நாகை மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விழாவில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன், துணை தாசில்தார் வேதையன், கவிஞர் நந்தலாலா மற்றும் முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in