இந்த முறையும் அடிப்பாரோ?; பயத்தில் தம்பி வீட்டுக்குச்சென்ற மனைவி: வீடு புகுந்து தாக்கிய ராணுவ வீரர் கைது

ராணுவ வீரர் கைது
ராணுவ வீரர் கைதுஇந்த முறையும் அடிப்பாரோ?; பயத்தில் தம்பி வீட்டுக்குச்சென்ற மனைவி: வீடு புகுந்து தாக்கிய ராணுவ வீரர் கைது

குமரி மாவட்டத்தில் மனைவி மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, தன் மனைவியின் சகோதரரின் வீட்டையும் சேதமாக்கிய ராணுவ வீரரைப் போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகில் உள்ள வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரசலையன். இவரது மகள் கவிதா(35). இவருக்கும் சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன்(40) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஜெகன் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைசெய்து வருகிறார்.

ஜெகன், ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன் மனைவி கவிதாவிடம் தகராறு செய்து அவரைத் தாக்குவது வழக்கம். இந்த நிலையில் தன் கணவர் ஜெகன் ஊருக்கு வந்ததும், ஒவ்வொருமுறையும் தாக்குவது போல் இம்முறையும் தாக்குவார் என அவரது மனைவி கவிதா அச்ச உணர்வின் காரணமாக, அவரது சகோதரர் தினேஷ் வீட்டில் தன் மகன்களுடன் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில் ஊருக்கு வந்த ஜெகன், தினேஷ் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தன் மனைவி கவிதாவை அடித்தார். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தினேஷின் வீட்டையும் சிலபகுதிகளை உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்துத் தினேஷ் கொடுத்தப் புகாரின் பேரில் புதுக்கடை போலீஸார் ராணுவ வீரர் ஜெகனைக் கைதுசெய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in