17 வயது சிறுவனை கடத்திச்சென்று குடும்ப வாழ்க்கை: திருமணமான 32 வயது இளம்பெண் போக்சோவில் கைது

17 வயது சிறுவனை கடத்திச்சென்று குடும்ப வாழ்க்கை: திருமணமான 32 வயது இளம்பெண் போக்சோவில் கைது

தன்னுடன் வேலை பார்த்த சிறுவனை கடத்திச் சென்று தனியாக வசித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (32). திருமணமான இவருக்கு 5 வயது பெண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் வசித்து வந்த மகாலட்சுமி ஒரு ஆலையில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து இவர் மாயமானார் .

பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாமல் போனது. இது குறித்து மகாலட்சுமியின் கணவர் போலீஸில் புகாரளித்தார். இதன்படி, ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆலையில்  வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனை கடத்திச் சென்று கன்னியாகுமரியில் பதுங்கி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அங்கு சென்ற போலீஸார் இருவரையும் ராஜபாளையம் அழைத்து வந்தனர். சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் மகாலட்சுமி மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in