
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டதற்காக மறைந்த மற்றும் வாழும் தமிழ் அறிஞர்கள் எட்டு பேரின் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது ஆகிய 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டது.
தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நூல் உரிமை தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின் வாரிசுகளுக்கு, 15 லட்சம் ரூபாய், கந்தர்வன், சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் வாரிசுகளுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. வாழும் தமிழ் அறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோருக்கு தல 15 லட்சம் ரூபாயை நூல் உரிமைத்தொகையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.