பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நான்கு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென் மாவட்ட பகுதிகளுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06042) ஜனவரி 16 நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்று சேரும். மறுமார்க்கத்தில் நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06022) நெல்லையிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.

திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறுமார்க்கத்தில் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி காலையில்  முன்பதிவு தொடங்கியுள்ளது.  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம்  பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏராளமானவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in