சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும்; செல்போனில் மிரட்டல்: அலர்ட்டான போலீஸ்

சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்ட்ரல் ரயில் நிலையம்சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும்; செல்போனில் மிரட்டல்: அலர்ட்டான போலீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என, மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய மர்ம நபர் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனைசென்டரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வெடிக்கும் என மாநில கட்டுப்பாட்டு அறைக்குச் செல்போனில் பேசிய மர்ம நபர் தெரிவித்ததால், சென்னை பூக்கடை, பெரிய மேடு போலீஸார் ரயில்வே போலீஸாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நபர், உதவிக்காக உடன் இருந்த அவருடைய தந்தையின் செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்குச் சென்ற போலீஸார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் இருந்து இன்று காலை வரை வெடிகுண்டு நிபுணர் குழு மோப்ப நாயுடன் சோதனைச் செய்து வந்த நிலையில் அது பொய்யான மிரட்டல் என்று அறிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in