வெடிகுண்டு தயாரிப்பு புத்தகம், வாட்ஸ் அப் தகவல்கள் அழிப்பு: என்ஐஏ விசாரணையில் அம்பலம்

வெடிகுண்டு தயாரிப்பு புத்தகம், வாட்ஸ் அப் தகவல்கள் அழிப்பு: என்ஐஏ விசாரணையில் அம்பலம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குன்னூர் ஆட்டோ டிரைவர் உமர் ஃபரூக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியது தெரியவந்துள்ளது.

கோவையில் கடந்த அக்.23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜமேஷா முபின் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் போன்ற வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் 75 கிலோ மூலப் பொருட்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரயாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), முபீனின் உறவினர் அப்சர்கான் ஆகிய ஆறு பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த அக்.27-ம் தேதி இவ்வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. கோவை கார் வெடிகுண்டு விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பலரிடம் கைமாறி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், காரைப் பயன்படுத்திய நபர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்குத் தொடர்புடைய முகமது தாரிக், உமர் ஃபரூர் மற்றும் ஃபெரோஸ் கான் ஆகிய மேலும் 3 பேரை கோவையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் இருதினங்களுக்கு முன்பாக கைது செய்துள்ளனர்.

கார் வெடிப்பில் பலியான முபின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  அதில் அவர் குன்னூர் உமர் ஃபரூக்குடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததும், வாட்ஸ்அப்பில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி கோவை, குன்னூர் என நேரடியாகச் சந்தித்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தை உமர் ஃபரூக் அழித்ததை என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 

முபின் சதித்திட்டத்தில் உமர் ஃபரூக் முக்கிய பங்காற்றியதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகே உமர் ஃபரூக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முபின் தனது நண்பர் முகமது தவ்ஃபிக்கிடம் என்பவரிடம் வெடிகுண்டு தயாரிப்பு குறித்தான ஒரு புத்தகத்தைக் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தவ்பிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த புத்தகத்தை என்ஐஏ கைப்பற்றியுள்ளது. இதையடுத்து என்ஐஏ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in