பூட்டிய அறையில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் வாலிபர் உடல்: கொலையா என போலீஸ் விசாரணை

பூட்டிய அறையில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் வாலிபர் உடல்: கொலையா என போலீஸ் விசாரணை

உத்தராகண்ட் மாநிலத்தில் பூட்டிய அறைக்குள் தலையில் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர் உடலை போலீஸார் மீட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் மோகினி வீதி தலன்வலகொட்வாலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அஷ்ரப்(35). இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

அங்கு தலையில் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் அஷ்ரப் இறந்து கிடந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, அஷ்ரப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரிதா தோவல் கூறுகையில், " அஷ்ரப் தலையில் துப்பாக்கிக்குண்டு காயங்கள் உள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நில உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அஷ்ரப் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சம்பவ இடத்தில் இருக்கும். எனவே, அஷ்ரப்பை யாரோ சுட்டுக்கொன்று விட்டு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். பூட்டிய அறையில் வாலிபர் உடல் துப்பாக்கிக்குண்டுகளுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டேராடூன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in