வெளுத்து வாங்கும் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வெளுத்து வாங்கும் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிசம்பர் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தேனி, விருதுநகர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் சாலைகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கின்றன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in