பெங்களூரு வெள்ள பாதிப்புக்கு காரணம் காங்கிரஸ்தான்: கர்நாடக முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!


பெங்களூரு வெள்ள பாதிப்புக்கு காரணம் காங்கிரஸ்தான்: கர்நாடக முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெங்களூரு வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமும், வரலாறு காணாத மழையும்தான் காரணம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பெங்களூருவில் கடந்த 90 ஆண்டுகளாக இது போன்ற மழை பதிவாகவில்லை. அனைத்து குளங்களும் நிரம்பி நிரம்பி வழிகின்றன, அவற்றில் சில உடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எல்லா முரண்பாடுகளையும் மீறி, மழையால் பாதிக்கப்பட்ட நகரத்தை மீட்டெடுப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். முழு நகரமும் சிரமங்களை எதிர்கொள்வதாக சித்தரிக்கப்படுகிறது, ஆனால் அவ்வாறு இல்லை. அடிப்படையில் பிரச்சினை இரண்டு மண்டலங்களில் உள்ளது, குறிப்பாக மகாதேவபுரா மண்டலம், அந்த சிறிய பகுதியில் 69 குளங்கள் இருப்பதால் அவை அனைத்தும் நிரம்பி வழிகிறது அல்லது உடைந்துவிட்டன. இரண்டாவதாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள அனைத்து நிறுவனங்களும் தாழ்வான பகுதிகளில் உள்ளன, மூன்றாவது காரணம் ஆக்கிரமிப்புகள்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் நிறைய ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோம். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தற்போதைய அவலத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களின் தவறான நிர்வாகமும் திட்டமிடப்படாத நிர்வாகமும்தான் காரணம்.

ஏரிகளை பராமரிக்க அவர்கள் நினைத்ததில்லை. இப்போது மழைநீர் வடிகால் மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி கொடுத்துள்ளேன். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால்களை சீரமைக்க உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.300 கோடியை வழங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in