`என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை'- காதலியின் செயலால் காதலன் தற்கொலை!

காதலன் தற்கொலை
காதலன் தற்கொலை`என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை'- காதலியின் செயலால் காதலன் தற்கொலை!

காதலி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பள்ளிபேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின், மகன் கணபதி. இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை பார்ப்பதற்காக, அவருடைய அக்கா நந்தினி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது அக்காவிடம் கணபதி, தனக்கு வேலையில் அதிக மன அழுத்தம் தருவதாகவும் , 6 மாதங்களாக தன்னை மன அழுத்தத்தில் தள்ளி புரியாமல் தடுப்பதாகவும் இதனால் தான் வேலையை விட்டு நிற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அக்கா தனது தம்பியை சமாதானம் செய்துள்ளார். அப்போது தனது காதல் குறித்து கணபதி அவரின் அக்காவிடம் கூறவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கணபதி தூங்கி இருந்த அறைக்கு சென்ற பொழுது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணபதியின் அக்கா மற்றும் தாய் ஆகியோர் உடலை மீட்டுள்ளனர்.

அப்போது கணபதியின் சட்டை பாக்கெட்டில் கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம், தான் காதலித்து வந்த பெண்தான் என்றும் அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அதனைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் வேலையில் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்திய சண்முகம் மணி ஆகியோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணபதியின் அக்கா உடனடியாக இது குறித்து அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் தனது தம்பியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அச்சரப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வி மற்றும் வேலைப்பளு காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in