பீர் பாட்டில்களை திருடி குடிக்கும் குரங்கு - பீதியில் சுற்றும் மதுப்பிரியர்கள்: அதிர்ச்சி வீடியோ

பீர் பாட்டில்களை திருடி குடிக்கும் குரங்கு - பீதியில் சுற்றும் மதுப்பிரியர்கள்: அதிர்ச்சி வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மதுவைத் திருடி குடிக்கும் வினோதமான சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் குரங்கு ஒன்று மதுபானக் கடைகளுக்குள் புகுந்து, மது பாட்டில்களை திருடுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையில், மதுவைத் திருடிக் குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப்பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எல்லா ஊர்களிலும் குரங்குகள் புகுந்து தொல்லை செய்வதும், உணவுப்பொருட்களை தூக்கிச் செல்வதும் சகஜமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால் இந்த குரங்கு சாவகாசமாக அமர்ந்து மது அருந்துவது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவில் குரங்கு ஒரு பாட்டிலில் உள்ள பீரை ரசித்து குடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

வனத்துறையினரின் உதவியுடன் இந்த குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாவட்ட கலால் அலுவலர் ராஜேந்திர பிரதாப் சிங், விரைவில் வாடிக்கையாளர்கள் இப்பிரச்சினையில் இருந்து விடுபடுவார்கள் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in