பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்தில் உள்ள விடுதியில் பிஎச்டி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாத் நாயக் (27). இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார். இதற்காக ஞானபாரதி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து ரங்கநாத் நாயக் படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து விபத்தில் ரங்கநாத் நாயக் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர், உடல்நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆயுர்வேத சிகிச்சையை ரங்கநாத் நாயக் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று கேன்டீனுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு அறைக்குச் சென்று அறையைப் பூட்டி விட்டுச் சென்றார். அவருடன் இருந்த அறையில் இருந்த நண்பர்கள், கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரங்கநாத் நாயக் தங்கியிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டது.
அங்கு உள்ளே ரங்கநாத் நாயக் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து மாணவர் ரங்கநாத் நாயக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் பிஎச்டி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!
காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!‘
எங்களை வெற்றிபெறச் செய்யாது போனால் மின்சாரத்தை துண்டிப்போம்’ வாக்காளர்களை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா...
அதிர வைக்கும் பின்னணி காரணம்!ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!