திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவரத் தடை: மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

திருச்செந்தூர் கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்துவரத் தடை: மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

சர்ப்பகாவடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் விதவிதமான காவடிகள் ஏந்தியும், வேல் ஏந்தியும், அலகு குத்தியபடியும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்தும் செல்கின்றனர். இந்த சர்ப்ப காவடி எடுத்து வர தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக சர்ப்பகாவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in