குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை: ஐசியூவில் அட்மிட்

குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை
குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தைகுப்பைக் கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை: ஐசியூவில் அட்மிட்

ஆக்ராவில் குப்பையில் கிடந்த பிறந்து சிலமணி நேரமான பெண் குழந்தை மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள பிரகாஷ்புரம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் நாய்கள் இன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக டூவீலரில் சென்ற அண்ணன், தங்கை, நாய்களை விரட்டி விட்டுப் பார்த்த போது பிறந்து சில மணிநேரமான பெண் குழந்தை குப்பைக் கிடங்கில் கிடந்துள்ளது.

இதையடுத்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த குழந்தையை மீட்ட அண்ணன், தங்கை இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்ட போலீஸார், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. குப்பையில் குழந்தையை விட்டுச் சென்றவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட சிலர், குழந்தையைத் தத்தெடுக்க வந்தனர். ஆனால், அவர்கள் சட்டப்பூர்வமாக அணுகாததால் போலீஸார் குழந்தையை தத்து கொடுக்க மறுத்து விட்டனர். பிறந்து சிலமணி நேரமான பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in