8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்கேப்பான ஆட்டோ ஓட்டுநர்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்கேப்பான ஆட்டோ ஓட்டுநர்

தங்கள் மகளைப் பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்புவதற்காக பெற்றோர் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். ஆனால் எட்டு வயது சிறுமிக்கு ஆட்டோ ஓட்டுநரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வரவேண்டும் என்பதால் அவரது வீட்டில் ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு அனுப்பிவந்தனர். அதேபகுதியைச் சேர்ந்த சுஜின் என்பவர் இந்த ஆட்டோவை ஓட்டிவந்தார்.

இந்நிலையில் திடீரென பள்ளி விட்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்த குழந்தை அழுதுகொண்டே இருந்தது. சிறுமி அழுவதன் காரணத்தைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தர். சுஜின் ஆட்டோவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறார். சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு இதை வீட்டில் போய் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதை சிறுமி அழுதுகொண்டே வீட்டில் சொன்னதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆட்டோ டிரைவர் சுஜின் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் ஆட்டோ ஓட்டுநர் சுஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே போலீஸார் தன்னைத் தேடுவது தெரிந்து சுஜின் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in