`எங்கள் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டுள்ளது'- ஹைதராபாத்திலிருந்து சென்னை போலீஸுக்கு வந்த புகார்

உடைக்கப்பட்ட ஏடிஎம்
உடைக்கப்பட்ட ஏடிஎம்`எங்கள் வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்டுள்ளது'- ஹைதராபாத்திலிருந்து சென்னை போலீஸுக்கு வந்த புகார்

சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏடிஎம்யை கல்லைக் கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சில தினங்களாக அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் திருவண்ணாமலையில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏடிஎம் கொள்ளை முயற்சிகள் நடைபெற்றன.

இந்தநிலையில், சென்னை கே.கே.நகர் முனியசாமி சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏடிஎம் இயந்திரத்தை பெரிய கற்களை போட்டு உடைத்து, மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

புகாரை அடுத்து விரைந்து சென்று போலீஸார் பார்த்தபோது கல்லைக் கொண்டு ஏடிஎம் மையத்தில் கொள்ளை நடைபெற்றதை கண்டுபிடித்தனர். கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் அங்கு இல்லை. இதனையடுத்து அந்த ஏடிஎம் மையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in