இளம்பெண் கழுத்தை பீர்பாட்டிலால் அறுத்து கொல்ல முயற்சி: தெலங்கானா எம்எல்ஏ பி.ஏவின் வெறிச்செயல்

இளம்பெண் கழுத்தை பீர்பாட்டிலால் அறுத்து கொல்ல முயற்சி: தெலங்கானா எம்எல்ஏ பி.ஏவின் வெறிச்செயல்

இளம்பெண் கழுத்தை பீர்பாட்டிலால் அறுத்துக் கொலை செய்ய முயன்ற எம்எல்ஏவின் உதவியாளரின் செயலால் ஹைதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மாகண்டி கோபிநாத். இவருடைய தனிப்பட்ட உதவியாளராக இருப்பவர் விஜயஷிம்கா. சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டப்பட்டது. அப்போது கலைநிகழ்ச்சியில் நிஷா(35) என்பவர் பங்கேற்றுளளார். அப்போது விஜயஷிம்காவுக்கு அவர் அறிமுகமாகியுள்ளார். நிஷாவுக்கு ஏற்கெனவே திருணமாகி சூரஜ் என்ற கணவர் உள்ளார்.

இந்த நிலையில். இன்று அதிகாலை மது போதையில் நிஷா வீட்டுக்குச்சென்ற விஜயஷிம்கா, அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு நிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் விஜயஷிம்கா, பீர் பாட்டிலை உடைத்து நிஷா கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் பீறிடவும், அங்கிருந்து விஜயஷிம்கா தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த நிஷா, கணவர் சூரஜ்க்கு போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரஜ், நிஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அத்துடன் ஜூபிலி ஹில்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளரின் இந்த வெறிச்செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in