ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கியவரை காட்டிக்கொடுத்த பொதுமக்கள்: விருத்தாசலம் வாலிபர் கைது

விருத்தாசலம் வாலிபர் கைது
விருத்தாசலம் வாலிபர் கைது ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கியவரை காட்டிக்கொடுத்த பொதுமக்கள்: விருத்தாசலம் வாலிபர் கைது
Updated on
1 min read

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை ஆபாசமாக பேசி தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டிக்கொடுத்தவருக்கு சன்மானம் கொடுக்க இருப்பதாக ரயில்வே காவல்துறை அறிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அந்த வீடியோவில் நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, நாங்க எல்லா வேலையும் செய்து கொள்வோம், என வடமாநில இளைஞர்களை தாக்கி தகாத வார்த்தையால் அந்த நபர் பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வந்ததால், வடமாநில இளைஞர்களை தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்தை தமிழக ரயில்வே காவல்துறை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டது. மேலும் இந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால் துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தமிழக ரயில்வே காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தை சேர்ந்த மகிமைதாஸ்(38) என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். கைது செய்யபட்ட இவர் கூலி தொழிலாளி என்பதும், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் போது விருத்தாசலம் அருகே மகிமைதாஸ் வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கி இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே மகிமைதாஸ் மீது சிறு வழக்குகள் இருப்பதாகவும், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே காவல்துறை, துப்பு கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் தர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in