உத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு 

உத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு 

ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் அருகே  உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வளாகத்தில் ஒற்றைக்கல் மரகத நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பூசிய சந்தனத்துடன் நடராஜர்  பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் சிலை மீது பூசிய சந்தனக்காப்பு களையப்படும்.

இதன்படி, இந்தாண்டு விழா டிச.28-ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று (ஜன.5) காலை 8 மணியளவில்  சந்தனம் களையப்பட்டது. இதைத்தொடர்ந்து  சந்தனம், மஞ்சள், தேன், பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், விபூதி, எண்ணெய், பஞ்சார்மிர்தம் உள்பட 32 வகை திரவிய  அபிஷேகம்  மூலவருக்கு நடந்தது. இதன்பின் பக்தர்கள்  தரிசனம் செய்தனர். இரவு 11 மணியளவில் மூலவர் மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிலை மீது  இன்று (ஜன.6) அதிகாலை மீண்டும் சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in