நண்பரின் தாயுடன் தகாத உறவு உள்ளதாக கூறிய நபர்; உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை

கொலை
கொலைநண்பரின் தாயுடன் தகாத உறவு உள்ளதாக கூறிய நபர்; உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை

தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறிய நண்பனை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல், முருகன், கார்த்திக். இவர்கள் மூவரும் அந்த பகுதி குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், அட்டை, இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்று சாலையோரம் தங்கி வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் தனது தாயார் ஜமுனாவுடன் சாலையோரமாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மூவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது வடிவேலுக்கு, கார்த்திக்கின் தாயார் ஜமுனாவுடன் தகாத உறவு உள்ளதாக முருகன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், முருகனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த முருகன் இரும்பு கம்பியால் வடிவேலு முகத்தில் தாக்கியுள்ளார். பதிலுக்கு வடிவேலு உருட்டுக் கட்டையால் முருகனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். தகவல் அறிந்த பூந்தமல்லி போலீஸார் வடிவேலை பிடித்து விசாரித்து வந்தனர். முருகன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீஸார் வடிவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in