குளிர்பானத்தில் மயக்க மருந்து: அறைக்குள் சிக்கிய சிறுமியை சீரழித்த 6 பேர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்
சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்குளிர்பானத்தில் மயக்க மருந்து: அறைக்குள் சிக்கிய சிறுமியை சீரழித்த 6 பேர் கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சத்ரினா காவல் நிலையத்திற்குட்பட்ட 16 வயது சிறுமி அவரது நண்பரின் அழைப்பின் பேரில் நேற்று அவரது அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மேலும் 5 வாலிபர்கள் இருந்துள்ளனர்.

அழைத்துச் சென்ற நண்பர், சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை அறியாமல் அந்த சிறுமி வாங்கிப் பருகியுள்ளார். அதைக்குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மயக்கமடைந்தார். இதன் பின் அறையில் இருந்த 6 வாலிபர்களும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதன் பின் மயக்கம் தெளிந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள், சத்ரினாகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போக்சோ, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை இன்று கைது செய்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in