அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

உயிரிழந்த விமானி ஹிம்மனில் குமார்
உயிரிழந்த விமானி ஹிம்மனில் குமார்

டெல்லியில் பயிற்சியின் போது ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக பணியாற்றிய ஹிம்மனில் குமார் (30) என்பவர், நேற்று காலை முனையம் 3-ல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் இருந்த சக பணியாளர்கள் விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிம்மனில் குமார் சிறிய அளவிலான விமானங்களை ஓட்டிச் செல்லும் விமானி என தெரிகிறது.

அவர் பெரிய விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். விடுமுறைக்கு சென்று மீண்டும் பயிற்சிக்கு வந்த நிலையில், இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.

ஹிம்மனில் குமாரின் கடந்த கால மருத்துவ ஆய்வு முடிவுகள் அனைத்தும் அவரது உடல்நிலை நன்றாகவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானியின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in