கேரளாவைத் தொடர்ந்து குஜராத்திலும் கொடூரம்: 14 வயது சிறுமி நரபலி

கேரளாவைத் தொடர்ந்து குஜராத்திலும் கொடூரம்: 14 வயது  சிறுமி நரபலி

கேரளாவைத் தொடர்ந்து குஜராத்திலும் பண ஆசையால் 14 வயது மகளை நரபலி கொடுத்த பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தின் தாராகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவேஷ் அக்பரி. இவரது 14 வயது மகள் சூரத்தில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவரது படிப்பை நிறுத்திய அவரது தந்தை, தனது பண்ணை வீட்டிற்கு மகளை அழைத்து வந்துள்ளார். பண நெருக்கடியில் இருந்த பவேஷ் அக்பரி தனது சகோதர் திலீப்புடன் சேர்ந்து தனது மகளை வைத்து அக். 3-ம் தேதி இரவு அமானுஷ்ய பூஜை நடத்தியுள்ளார். இதன் பின் நெருப்பிற்கு முன் அந்த சிறுமியை இரண்டு மணி நேரமாக நிற்க வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதன் பின் அவர்கள் சேர்ந்து அந்த சிறுமியை நரபலி கொடுத்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த ஆதாரங்களை அழித்ததுடன் சிறுமியின் உடலையும் எரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பவேஷ் அக்பரி.
கைது செய்யப்பட்டுள்ள பவேஷ் அக்பரி.

இந்த நிலையில் பவேஷ் அக்பரியின் வீட்டில் நடந்த பூஜை குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி நரபலி கொடுத்த விஷயம் வெளியானது. இதையடுத்து பவேஷ் அக்பரி, அவரது மனைவி மற்றும் திலீப் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், நரபலி கொடுத்தால் பணப்பிரச்சினை தீரும் என்று மந்திரவாதி சொன்னதால், தங்கள் மகளைக் கொன்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பண ஆசைக்காக, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் நடைபெற்றது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் குஜராத்தில் பெற்ற மகளையே பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in