வெறுப்பின் சர்வதேச விளைவு: கற்றுக்கொள்ள வேண்டிய கசப்புப் பாடம்
அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது என சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், சட்டக் கல்வி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது வலியுறுத்தியிருக்கிறார். மத விஷயத்தில் அரசுகள் கவனத்துடன் செயல்படாவிட்டால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, வெறுப்புப் பேச்சுக்குக் கடிவாளம் போடவில்லை என்றால் அதற்கான விலையை அரசு கொடுத்தாக வேண்டும். நபிகள் நாயகம் குறித்த அவதூறுக் கருத்துகளும், அதன் பின்னொட்டாக எழுந்திருக்கும் பின்விளைவுகளும் அதைத்தான் சொல்கின்றன.

ஆங்கில செய்தி சேனல் விவாதத்தின்போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவும், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் ட்வீட் செய்த டெல்லி பாஜக ஐடி பிரிவின் தலைவர் நவீன் ஜிந்தலும்தான் இந்த விவகாரத்தின் முக்கிய கர்த்தாக்கள். இருவருமே சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை இதற்கு முன்பும் வெளியிட்டுவந்தவர்கள்தான். இருவரும் பாஜகவை பொதுவெளியில் பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பில் இருந்தவர்கள் என்பதால், இவர்களை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்தவர்கள் உட்பட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தற்போது விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்க்க, எதிர்த் தரப்பை எல்லை தாண்டி விமர்சிக்கும் ஆட்கள் எல்லா கட்சிகளிலும் உண்டு. இந்த முறை விவகாரம் வேறு வடிவம் எடுத்துவிட்டது. ஆளுங்கட்சி என்பதைத் தாண்டி நாட்டுக்கே இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிட்டது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.