தீபாவளி பண்டிகைக்காக இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில்: சென்னை மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு

தீபாவளி பண்டிகைக்காக இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில்: சென்னை மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் ரயில்களை இயக்க உள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22-ம் தேதிகளில் மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெரிசல் மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே, 2022 அக்டோபர் 20,21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நெரிசல் மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் 20, 21, 22 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in