சசிகலா உறவினர் நிறுவனத்தில் வெடித்து சிதறிய ஏசி; 2 ஊழியர்கள் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்!

சசிகலா உறவினர் நிறுவனத்தில் வெடித்து சிதறிய ஏசி; 2 ஊழியர்கள் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்!

சசிகலா உறவினருக்கு சொந்தமான சினிமா நிறுவனத்தில் ஏசி வெடித்து சிதறியதில் இரண்டு மெக்கானின் உயிரிழந்தவர். பலத்த காயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

சென்னை கிண்டி அம்பேத்கர் நகரில் ஜாஸ் சினிமாஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினரான விவேக் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இந்நிறுவனத்தின் 3-வது தளத்தில் உள்ள ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய வேண்டி ஜாபர்கான்பேட்டையில் உள்ள பாரத் ஏசி சர்வீஸ் சென்டருக்கு தகவல் தெரிவித்தனர். அன்று இரவு ஏசி சர்வீஸ் சென்டரில் இருந்து 3 ஊழியர்கள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சென்று பழுதடைந்த ஏசி இயந்திரத்தை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஏசி கம்ப்ரசர் வெடித்து சிதறியதில் சூளைமேடு பகுதியை சேர்ந்த சின்னதுரை(50), மதுரவாயலை சேர்ந்த இந்திரகுமார்(22), கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன்(41) ஆகியோர் 60 சதவீத தீக்காயமடைந்தனர். உடனே ஜாஸ் சினிமா ஊழியர்கள் காயமடைந்த 3 பேரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமார், சின்னதுரை ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமார் கடந்த 4-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நேற்று இரவு சின்னதுரையும் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in