பீர் பாட்டிலை உடைத்து குத்த முயற்சி; இன்ஸ்பெக்டரை பதறவைத்த இளைஞர்: கைது செய்ய சென்றபோது விபரீதம்

காவல் ஆய்வாளரை தாக்க முயலும் ராபின்சன்
காவல் ஆய்வாளரை தாக்க முயலும் ராபின்சன்காவல் ஆய்வாளரை பீர் பாட்டில் கொண்டு தாக்க முயன்ற இளைஞர் கைது..!

கும்மிடிப்பூண்டி அடுத்த இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் காவல் ஆய்வாளரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை முயற்சி செய்த தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஏசிஎல் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள பழைய இரும்புகளை திருடுவதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து (56) என்பவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவலர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் பெத்திகுப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சிப்காட் போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தொழிற்சாலை காவலரை தாக்கிய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன் (36) என்பவரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் கையில் இருந்த பீர் பாட்டலை உடைத்து போலீஸாரை குத்த முயன்றார். போலீஸார் எதிர்பாராத நேரத்தில் ராபின்சன் தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவனை தேடி வந்த நிலையில் இன்று சிப்கார்ட் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ராபின்சன் போலீஸாரை பீர் பாட்டிலுடன் தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in