சிகிச்சைக்காக சென்னை வந்த பெண்: நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்

நடுவானில் விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி
நடுவானில் விமானத்தில் மாரடைப்பால் பெண் பலிசிகிச்சைக்காக சென்னை வந்த பெண்: நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்

வங்காள தேசத்தைச் சேர்ந்த பெண், புற்றுநோய் சிகிச்சைக்காக கணவருடன் டாக்காவில் இருந்து சென்னைக்கு,.விமானத்தில் வந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் முகமது அபு. இவருடைய மனைவி குர்ஸிதா பேகம் (43). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வங்காள தேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமடையவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள, வேலூர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக  முகமது அபு, தனது மனைவி குர்ஸிதா பேகத்தை அழைத்துக் கொண்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் மூலமாக நேற்று மாலை, சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதையடுத்து, இதுகுறித்து பதற்றத்துடன் விமான பணிப்பெண்களிடம் முகமது அபு கூறியுள்ளார்.அவர்கள் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அங்கு மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைக்கும்படி கூறியுள்ளனர்.

இந்தநிலையில் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும்,மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் ஏறி, பரிசோதித்தனர்.ஆனால் குர்ஸிதா பேகம் தனது இருக்கையிலேயே உயிரிழந்திருந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீஸார் விரைந்து வந்து, குர்ஸிதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in