தாயிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

உயிரிழந்த சேவிகா
உயிரிழந்த சேவிகாதாயிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் தாயிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற ரேப்பிடோவில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்குமாம்பழத்தில் தனது தோழியுடன் வசித்து வந்தவர் 34 வயதான சேவிகா. இவர் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்தார். தனது பிறந்தநாளையொட்டி வியாசர்பாடியில் வசிக்கும் தனது தாயிடம் வாழ்த்து பெறுவதற்காக இன்று அதிகாலை ரேப்பிடோவில் சென்றுள்ளார்.

தேனாம்பேட்டை அண்ணா சிலை அருகில் செல்லும் போது பின்னிருந்த வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் வண்டி ஓட்டி வந்த நபர் தப்பிவிட தலைக்கவசம் அணியாமல் பின்னாடி இருந்த சேவிகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பாண்டிபஜார் போலீஸார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற டிப்பர் லாரி மற்றும் ஓட்டுநர் குறித்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த நாளன்று இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in