இன்ஸ்டாகிராமில் பழக்கம்; பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்: சிக்கிய வாலிபர் போக்சோவில் கைது

இன்ஸ்டாகிராமில் பழக்கம்; பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்: சிக்கிய வாலிபர் போக்சோவில் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியுடன் பழகி அவரை தன்னோடு அழைத்துப் போய் வைத்திருந்த திருப்பூர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 21-ம் தேதி பள்ளிக்குச்சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. மாணவியின் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த லட்ச பிரபு(22) என்பவருடன், 9-ம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். அவருடன் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் மாணவியையும், அவரை ஆசைவார்த்தை சொல்லி அழைத்துச் சென்ற லட்ச பிரபுவையும் குளச்சல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து விசாரணை நடத்திய போலீஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் 9-ம் வகுப்பு மாணவியை ஆசைகாட்டி அழைத்துச் சென்ற லட்ச பிரபுவைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in