மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தேர்வில் உதவ நியமிக்கப்பட்ட ஆசிரியர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்ட ஜெகநாத்
கைது செய்யப்பட்ட ஜெகநாத்மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தேர்வில் உதவ நியமிக்கப்பட்ட ஆசிரியர் போக்சோவில் கைது

பிளஸ்1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 பேர் மாணவர்களும், 7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் மொழித்தாள் தேர்வை எழுதினர்.

மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி அரியர் தேர்வு எழுத வந்துள்ளார்.

மாணவிக்கென தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்த நிலையில் பதற்றத்துடன் காணப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத் உதவ வந்துள்ளார்.

இந்நிலையில் தேர்வு எழுத சென்ற போது ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதன் பேரில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸார் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனியார் பள்ளி ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் ஜெகநாத்தை கைது செய்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in