எரியும் நெருப்போடு காதலியைக் கட்டிப்பிடித்த காதலன்: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

எரியும் நெருப்போடு காதலியைக் கட்டிப்பிடித்த காதலன்: திருமணம்  செய்ய  மறுத்ததால் ஆத்திரம்

திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன் காதலியையும் கட்டிப்பிடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் அரசு அறிவியல் கழகம் உள்ளது. இங்குள்ள உதவிப் பேராசிரியர் அறையில் பூஜா சால்வே(28) என்ற மாணவி இருந்துள்ளார். அப்போது கங்காகேட்டைச் சேர்ந்த கஜனன் முண்டே(30) அங்கு வந்துள்ளார். இவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பிஹெச்டி படித்து வந்தார்.

அறையின் கதவை மூடிய கஜனன்," ஏன் என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறாய்" என்று கூறியவாறு கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீதும், சால்வே மீதும் ஊற்றினார். லைட்டரால் தன் மீது தீயைப் பற்ற வைத்த கஜனன், சால்வேயைக் கட்டிப்பிடித்தார். இதனால் இருவரும் தீப்பிடித்து எரிந்தனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அகறிவியல் கழக ஊழியர்கள் கதவை உடைத்து தீயணைக்கும் கருவியால் இருவரின் தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கஜனன் முண்டேவும், பூஜா சால்வேயும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்ய கஜனன் வலியுறுத்திய போது, அதை சால்வே மறுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து கஜனன் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரித்து வருகின்றனர். சால்வே பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பேசும்புரா காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அறிவியல் கழக இயக்குநர் ராஜேந்திர சத்புடே கூறுகையில்," பூஜா சால்வே எங்களின் 2004-2005ம் ஆண்டு மாணவர். எங்கள் இன்ஸ்டியூட் உதவி பேராசிரியையான வைஷாலி வடேகரைச் சந்திக்க பூஜா சால்வே நேற்று வந்தார். இந்த நிலையில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in