களக்காட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து: சக மாணவர் வெறிச்செயல்

களக்காட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து: சக மாணவர் வெறிச்செயல்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் அரசு பள்ளி மாணவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அந்த சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு இருதரப்பு மாணவர்கள் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவனின் பாட நோட்டை, எடுத்து ஒளித்து வைத்தது தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இந்த விசயம் பள்ளிக்கூட தலைமையாசிரியர் வரை சென்றது.

இதனால் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் அவனது பெற்றோரை அழைத்துவருமாறு தலைமையாசிரியர் சொன்னார். இதனால் கோபத்தில் அந்த மாணவன் இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்தார். சக மாணவனின் முதுகில் திடீரென கத்தியால் குத்தினார். இதில் முதுகுப் பகுதியில் கத்திகுத்து பட்ட மாணவர் மருத்துவ சிகிச்சைக்காக களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து இன்று பள்ளிக்கூடத்தில் கல்வித்துறை அதிகாரிகளும், களக்காடு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in