கடைக்குச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட அக்கா, மாமா மீது தாக்குதல்: 5 பேர் கைது

கைது
கைதுகடைக்குச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட அக்கா, மாமா மீது தாக்குதல்: 5 பேர் கைது

காட்டுமன்னார்கோவிலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம்). 15 வயதான இவர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ராணியை வழிமறித்ததோடு, ஆபாச வார்த்தைகள் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து, தனது அக்கா மற்றும் மாமாவிடம் சிறுமி ராணி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அவர்கள் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் சிறுமியின் மாமாவையும், சகோதரியையும் தாக்கியுள்ளனர். இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in