பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிவாயு குழாய்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிவாயு குழாய்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

கோவையில் பயங்கர சத்தத்துடன் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டத்தின் மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க எரிவாயு குழாய் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் எரிவாயு குழாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8- ம் தேதி முதல் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் பொருத்தப்பட்டு அந்த குழாய் வழியாக சோதனைக்காக இன்று எரிவாயு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்தது.


இந்த நிலையில் இன்று திடீரென எரிவாயு குழாய் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் பொது மக்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தற்காலிகமாக குழாய் பாதிக்கும் பணியை நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in