குளியலறையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.
புதுச்சேரி, கீழையூர் மாரியம்மன் கோயிலை சேர்ந்தவர் சுரேஷ்- சரோஜினி தம்பதியினர். இவரது 3 வயது மகள் ஸ்ரீஜகாய் வீட்டில் உள்ள குளியலறையில் உள்ள பக்கெட்டில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது குழந்தை தண்ணீர் விழுந்து உயிரிழந்திருக்கிறது. குழந்தை காணாமல் போனதை அறிந்த தாய் உடனடியாக தேட ஆரம்பித்து இருக்கிறார். அப்போது குளியலறையில் சென்று பார்த்தபோது குழந்தை பக்கெட்டுக்குள் மூழ்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சரோஜினி உடனடியாக குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் தாய் கதறி அழுதார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர். இது குறித்து திரு.பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குளியலறை இருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.