தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு!

தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு!

தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு வங்கக் கடலில் கோடியக்கரைக்கு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் பத்து பேர் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறையை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கடற்படையின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மறைந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in